தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்ற தேஜஸ்வி குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு..!!

Advertisement

டெல்லி: வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்ற தேஜஸ்வி குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. பீகாரில் சட்டசபை தேர்தல் வருவதையொட்டி, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. 2003ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்கள், தங்கள் குடியுரிமையை நிரூபிக்க தேவையான ஆவணங்களை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இது அம்மாநில மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. திருத்தப்பணியின் முதல்கட்டம் முடிந்தநிலையில், தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று வெளியிட்டது.

இந்த நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என பீகார் முன்னாள் துணை முதலமைச்சரும் ஆர்.ஜே.டி.தலைவருமான தேஜஸ்வி யாதவ் புகார் தெரிவித்திருந்தார். பீகாரில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு பிறகு வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. தன் பெயர் இடம்பெறாததால் சட்டமன்றத் தேர்தலில் எப்படி போட்டியிடுவேன் என்று தேஜஸ்வி கேள்வி எழுப்பினார். எனது பெயர் இடம்பெறாதது ஜனநாயக படுகொலை, வாக்களிக்கும் உரிமையை பறிக்கும் செயல். உச்சநீதிமன்ற பரிந்துரை, எதிர்க்கட்சிகள் கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் புறந்தள்ளிவிட்டது என தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதில், நேற்று வெளியிடப்பட்ட பீகார் வரைவு வாக்காளர் பட்டியலில் தேஜஸ்வி பெயர் உள்ளது. அவர் தனது பழைய EPIC எண்ணை வைத்து தேடியதால் அவரால் தனது பெயரை கண்டுபிடிக்க முடியவில்லை , புதிதாக வழங்கப்பட்ட EPIC எண் - RABO456228 மற்றும் சீரியல் எண் 416-ல் தேஜஸ்வி யாதவின் பெயர் இடம்பெற்றுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

Advertisement