ரஷ்யாவில் விமானம் கீழே விழுந்து விபத்து: 50 பேரும் உயிரிழப்பு
மாஸ்கோ: ரஷ்யாவில் இருந்து 50 பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில், விமானத்தில் பயணித்த 50 பேரும் உயிரிழந்தனர். ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் இருந்து 50 பேருடன் அங்காரா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.என்.24 ரக விமானம் சென்று கொண்டிருந்தது. விமானத்தில் விமான பணியாளர்கள் 6 பேர், குழந்தைகள் 5 பேர் உள்ளிட்ட 50 பேர் பயணம் செய்தனர். விமானம், சீனா எல்லையையொட்டி அமுர் மகாணத்தில் உள்ள டின்டா விமான நிலையம் அருகே சென்றபோது திடீரென விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதனால் விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். விமானத்துடனான தொடர்பை மீண்டும் கொண்டு வர கட்டுப்பாட்டு அறை முயற்சி மேற்கொண்டு வந்தது. இதற்கிடையே மாயமான விமானம் டின்டாவில் இருந்து 1.5 கிமீ தொலைவில் கீழே விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை ரஷ்ய அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர். அந்த பகுதியில் விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விமானத்தில் இருந்தவர்களின் கதி என்ன என்பது குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. விமானத்தில் பயணித்த 50 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.