தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அன்புமணியின் நடைபயணத்துக்கு காவல்துறை தடை விதிக்கவில்லை: வழக்கறிஞர் கே.பாலு விளக்கம்

சென்னை: அன்புமணியின் நடைபயணத்துக்கு காவல்துறை தடை விதிக்கவில்லை என்று பாமக வழக்கறிஞர் கே.பாலு சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார். ராமதாஸ் எதிர்ப்பையும் மீறி திருப்போரூர் முருகன் கோவிலில் இருந்து நேற்று மாலை 5 மணிக்கு ‘உரிமை மீட்க தலைமுறை காக்க ‘ என்கிற நடைப்பயணத்தை அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டபடி தொடங்கினார். அன்புமணி நடைபயணத்திற்காக வைக்கப்பட்ட பேனர்களில் ராமதாஸ் பெயரில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. 100 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள அன்புமணி ராமதாஸ்க்கு முதல்நாளே பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனிடையே அன்புமணி ராமதாஸின் தமிழக உரிமை மீட்பு பயணத்துக்கு தடை விதிக்கக்கோரி ராமதாஸ் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்திருந்தார்.
Advertisement

இந்நிலையில், அன்புமணியின் நடைபயணத்துக்கு காவல்துறை தடை விதிக்கவில்லை என்று பாமக வழக்கறிஞர் கே.பாலு சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக பாமக வழக்கறிஞர் கே.பாலு கூறுகையில்; மருத்துவர் ராமதாஸ் அளித்த புகார் மனுவை மட்டுமே அனைத்து மாவட்ட காவல்துறைக்கும் டிஜிபி அலுவலகம் அனுப்பி உள்ளது. செங்கல்பட்டு உத்திரமேரூரில் அன்புமணியின் நடைப்பயணம் திட்டமிட்டப்படி நடைபெறும். அன்புமணியின் நடைப்பயணம் பெரும் வெற்றியை பெறும். தமிழக அரசியலில் அன்புமணியின் நடைப் பயணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும். அன்புமணியின் நடைப் பயணத்துக்கு தடை விதிக்க வேண்டும் என டிஜிபியிடம் ராமதாஸ் மனு கொடுத்திருந்தார்.

 

Advertisement