தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வடகிழக்கு பருவமழையை ஒட்டி சென்னை உட்பட காஞ்சிபுரம், திருவள் ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

சென்னை: 2025-2026 ஆம் ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கென தமிழக அரசு ரூ.38.00 கோடிகள் நிதி ஒதுக்கீடு செய்து அதன்படி சென்னை பெருநகர எல்லைக்குள். 15 மண்டலங்களில் 78 பணிகளும், சென்னை புறநகர் மற்றும் காஞ்சிபுரம், திருவள் ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 117 பணிகளும் தொடங்கி நீர்வளத்துறை மூலம் நடைபெற்று வருகிறது.

இதில் பக்கிங்காம் கால்வாயில் 19 பணிகளும், கூவம் ஆற்றில் 19 பணிகளும், அடையாற்றில் 5 பணிகளும், இதர 35 பணிகள் வரவு கால்வாய்கள், ஏரிகள், உபரி நீர் கால்வாய், மடுவு பகுதிகளில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள். திடக்கழிவுகள். மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணிகள் 234 மிதக்கும் மண் கழிவு அகற்றும் இயந்திரங்களுடன் குப்பைகளை அகற்ற லாரிகளுடன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுதவிர முட்டுக்காடு, புதுப்பட்டினம், கூவம், அடையாறு, எண்ணூர் மற்றும் பழவேற்காடு (Pulicat) முகத்துவாரங்களில் சேர்ந்துள்ள மணல் படிவுகள் அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் முடியும் வண்ணம் தீவிரப்படுத்தும் நோக்கில் நீர்வளத்துறை செயலர் ஜெ.ஜெயகாந்தன் முதன்மை தலைமைப் பொறியாளர் (ம) தலைமைப் பொறியாளர் (பொது), நீ.வ.து., பொறி.சு.கோபாலகிருஷ்ணன், சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் பொறி.சி.பொதுப்பணித்திலகம், பாலாறு வடிநில வட்ட கண்காணிப்புப் பொறியாளர் பொறி.ம.மகேஸ்நாகராஜன், ஆரணியாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்களுடன் தள ஆய்வு இன்று மேற்கொண்டுள்ளார்.

மேலும், அனைத்து நீர்த்தேக்கங்களின் இயக்கம் மற்றும் பராமரிப்புக்காக ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்திற்கான கட்டிடங்களையும், கட்டுப்பாட்டு மையத்திற்கான மின் கணினி செயற்கைக்கோள் தகவல் கருவிகள் மற்றும் உபகரணங்களையும் ஆய்வு செய்தார்.

Related News