தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நீட் தேர்வால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க 15 வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது உச்சநீதிமன்றம்

டெல்லி : நீட் தேர்வால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க 15 வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது. நீட் பயிற்சி மையங்களை கட்டுப்படுத்தும் விதிமுறைகளை இரண்டு மாதங்களில் வெளியிடுமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 17 வயது நீட் பயிற்சி மாணவி 2023 ஆம் ஆண்டு சந்தேகத்துக்கு இடமான முறையில் விடுதியில் உயிரிழந்தார். இதையடுத்து சிபிஐ விசாரணை கோரி அவரது தந்தை தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து அவரது மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மாணவி மரண வழக்கை சி பி ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. அத்தோடு நீட் உயிரிழப்புகளை தடுக்க நாடு முழுவதும் விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை வழங்கி தீர்ப்பளித்தது. அதன்படி நீட்பயிற்சி மையங்களை முறைப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் சட்டம் இயற்ற வேண்டும். அதற்கு முன்னதாக இரண்டு மாதங்களில் அதற்கான விதிமுறைகளை வகுத்து அமல்படுத்த வேண்டும்.

பயிற்சி மையங்களை பதிவு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கும், அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. விதிமுறைகள் வகுக்கப்பட்டு அமல்படுத்தப்பட்ட விபரங்கள் குறித்து 3 மாதங்களில் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஒன்றிய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தவிர அனைத்து கல்வி நிலையங்களிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வு தொடர்பாக உரிய மனநல ஆலோசனைகள் வழங்க வேண்டும் உட்பட 15 பரிந்துரைகளை வழங்கி உச்சநீதிமன்றம் விரிவான தீர்ப்பு அளித்துள்ளது. இந்த உத்தரவுகள் செயல்படுத்தப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Related News