தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நிதியை முழுமையாக பயன்படுத்தி, இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

சென்னை : தமிழ்நாட்டிற்கான நிதியை ஒன்றிய அரசு தடுத்து வரும் நிலையில், சிறப்பான செயல் திறனை திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வருவதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. அத்திட்டத்தின் கீழ் நிதியை முழுமையாக பயன்படுத்தி, இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நிதியை முழுமையாக பயன்படுத்தி, இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதை சுட்டிக் காட்டி உள்ளார்.

தமிழ்நாட்டில் தான் அதிகளவு மகளிர் இந்த திட்டத்தின் கீழ் பலன்பெற்றுள்ளனர் என்றும் இதுவும் திராவிட மாடல் அரசின் சிறப்பான ஆட்சிக்கு ஒரு சான்று என்றும் தெரிவித்துள்ளார். இது போன்று பல சாதனைகளை செய்து காட்டிய போதும், தமிழ்நாட்டிற்கான நிதியை வழங்காமல் ஒன்றிய பாஜக அரசு வஞ்சித்து வருவதாக கூறியுள்ள அமைச்சர் ராஜா, வேலையை வழங்குவது மட்டுமின்றி, முதலீடுகளை பெறவும் மக்களுக்கு அதிகாரம் வழங்கி உள்ளது திராவிட மாடல் அரசு என கூறியுள்ளார். இது தான் பெரியார் வழி, பேரறிஞர் வகுத்த கலைஞரின் பாதை, வளர்ச்சிக்கு அடித்தளம் என்றும் அந்த பதிவில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.