தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோட்டூர்புர காவல் நிலைய விசாரணைக்குச் சென்றவர் வீடு திரும்பியதும் மரணம் - எஸ்.ஐ, இரு தலைமைக் காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

சென்னை : விசாரணைக்கு அழைத்துச் சென்றவர் மரணமடைந்த வழக்கில் எஸ்.ஐ., 2 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு சென்னை கோட்டூர்புரத்தில் குடிபோதையில் தகராறு செய்ததாக பழனி என்பவரை காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பழனி மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைக்காததால், அவரை காவல்துறையினர் கடுமையாக தாக்கி உள்ளனர். பின்னர் அவர் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், அன்றைக்கு இரவே பழனி மரணம் அடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பழனியின் தந்தை ரங்கநாதன் என்பவர் புகார் அளித்தார்.

Advertisement

காவல்துறையினர் மீதான புகார் என்பதால், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, இது சம்பந்தமாக வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.விசாரணை அறிக்கையில், காவல்துறையினர் தாக்கியதால் தான், பழனி மரணம் அடைந்தார் என தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில், கோட்டூர்புரம் SI ஆக இருந்த ஆறுமுகம், தலைமை காவலர்களாக இருந்த மனோகரன், ஹரிஹர சுப்ரமணியனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மேலும் அவர்களுக்கு தலா ரூ.10,000 அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இரு காவலர்கள் இறந்துவிட்டதால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

Advertisement