கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 14 தமிழக மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை கடற்படை
ராமேஸ்வரம்: பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று இந்திய எல்லையான கச்சத்தீவு பகுதிகளில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் பழுதாகி நின்ற விசைப்படகு மற்றும் அதில் இருந்த 10 மீனவர்களை சிறைபிடித்தனர். சிறைபிடித்த 10 மீனவர்கள் மீது எல்லை தாண்டி சென்றதாக வழக்குபதிவு செய்து காங்கேசன் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.
அதேபோல தொண்டி பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு விசைப்படகு கச்சதீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது, அந்த படகு மற்றும் அதில் இருந்த 4 மீன்வர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மொத்தம் 4 மீனவர்களும் ஒரு விசைப்படகு மற்றும் ஒரு 1 நாட்டுப்படகை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் பாம்பன் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மீனவர்கள் மீது எல்லைதாண்டிவந்ததாக வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளனர். ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து 14 மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.