தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தொழிலதிபர் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தொழிலதிபர் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானியின் குழுமத்தின் கீழ் உள்ள RAAGA நிறுவனம் யெஸ் (YES) வங்கியிடமிருந்து கடன் பெற்றுள்ளது. ரூ.12,800 கோடி கடன் பெற்றிருந்த நிலையில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வாங்கிய கடனுக்கான வட்டியை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. கடன் தொகையையும், வட்டியையும் திருப்பி செலுத்துவதில் மோசடி செய்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே பணமோசடி வழக்கு தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கியும் அனில் அம்பானி மோசடி நபர் என அறிவித்தது. எஸ்பிஐ வங்கி அறிவித்த அடுத்த நாளே, (ஜூலை 24 அன்று) அனில் அம்பானியின் 5 நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனைகளை நடத்தியது. பெரிய அளவிலான நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் நிலையில், சிபிஐ பதிவு செய்த இரண்டு எஃப்ஐஆர்களின் அடிப்படையில் அமலாக்கத் துறை இந்த சோதனைகளை நடத்தியது.

டெல்லி மற்றும் மும்பையில் 35 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், 25க்கும் மேற்பட்டோரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. இந்நிலையில், தொழிலதிபர் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆகஸ்ட் 5ம் தேதி விசாரணைக்கு ஆஜராக அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அண்மையில் அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அனில் அம்பானியை மோசடி நபர் என எஸ்.பி.ஐ. அறிவித்ததை தொடர்ந்து அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

 

Related News