தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்: தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபாட் இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை 100 சதவீதம் ஒப்பிட்டு பார்க்கக் கோரி வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
Advertisement

வாக்குப்பதிவு நேரத்திலேயே இவிஎம் எந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியும் என உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வாதம் செய்து வருகிறார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபாட் இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை 100 சதவீதம் ஒப்பிட்டு பார்க்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. முறைகேடு செய்வதற்கான மென்பொருள் பொருத்தப்பட்டிருந்தாலும் வாக்குப்பதிவு நாள் வரை அந்த எந்திரம் வழக்கம்போலவே செயல்படும். முறைகேடு செய்வதற்கான மென்பொருளில் நேரம் குறிப்பிட்டிருந்தால் வாக்குப்பதிவு நாளில் அதை பயன்படுத்தி தில்லு முல்லு செய்ய முடியும் என்று வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வாதம் செய்துள்ளார்.

வாதங்களை கேட்ட நீதிபதி தேர்தல் ஆணையத்திற்கு சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார். முறைகேடு நடைபெற்றால் என்ன தண்டனை வழங்கப்படும். மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு எண்ணிக்கைக்கு பிறகும் தொழில்நுட்ப நிபுணர்கள் பரிசோதிப்பதற்காக வைத்திருக்க முடியுமா. வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னும் பின்னும் இவிஎம் எந்திரத்தை பரிசோதிப்பது கட்டாயமா?, அப்படியானால் இடையில் சோதனை செய்ய வேண்டிய அவசியமில்லையா? இவிஎம் எந்திரத்துக்கான மென்பொருள் யாரிடம் இருக்கும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு தேர்தல் ஆணையம் வேட்பாளர் ஆட்சேபனை தெரிவித்தால் இடையில் சோதனை செய்யப்படும் என்றும் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னும் பின்னும் இவிஎம் எந்திரத்தை பரிசோதிப்பது கட்டாயமில்லை என்றும் நீதிபதியின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளது.

 

Advertisement

Related News