டெல்லியில் நடைபயிற்சி சென்ற மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் நகை பறிப்பு
இன்று காலை அவர் திமுக எம்.பி. சல்மாவுடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். இரண்டுபேரும் செக் தூதரகம் அருகே சென்றுகொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் தான் அணிந்திருந்த 4 சவரன் செயினை பறித்து சென்றதாக மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதா புகார் தெரிவித்துள்ளார்.
இந்த பகுதி வெளிநாட்டு தூதரகங்கள் அதிகமாக இருக்கும் பகுதி என்பதால் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு நிறைந்தபகுதியாக உள்ளது. இந்தநிலையில், தற்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் நகைபறிக்கபட்டுள்ளது பெரும் பேசுபொருளாக உள்ளது. இதுதொடர்பாக சாணக்கியபுரி காவல் நிலையத்தில் காங்கிரஸ் எம்.பி. சுதா புகார் அளித்திள்ளார். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.