தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவை மாவட்டம் ஆலந்துறை அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த யானை உயிரிழப்பு

கோவை ஆலந்துறை அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த யானை உயிரிழந்தது. கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை யானை வழிதவறி கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. 3 கிரேன்களின் உதவியுடன் யானை உடலை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement

கோவை காருண்யா நகர் பகுதியில் இருக்க கூடிய சபாரி மடை பகுதியில் நிர்மலா தேதி என்பவருக்கு சொந்தமான 10 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. இது வனபகுதியை ஒட்டியுள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டுயானை அந்த வழியாக சென்ற போது தோட்டத்தில் இருந்த சுமார் 25 அடி ஆழம் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது.

மேலும் அந்த கினற்றில் 20 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்த காரணத்தால் நீரில் மூழ்கிய ஆண் காட்டுயானை உயிரிழந்துள்ளது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்புதுறையினர் உயிரிழந்த காட்டுயானையின் உடலை 3 பொக்லைன் வாகனங்கள் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

கினற்றின் அளவு 10அடி அகலமும், 25 அடி ஆழமும் உள்ளது. அந்த கிணறு தற்போது கைவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய 10 வயது மதிக்கதக்க ஆண் காட்டுயானை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

Advertisement