தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொதுத்துறை வங்கிகளால் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.12 லட்சம் கோடி கடன்கள் தள்ளுபடி : ஒன்றிய அரசு

Advertisement

டெல்லி: பொதுத்துறை வங்கிகள் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.12 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, கடன் தள்ளுபடிகள் குறித்து கூறியதாவது"பொதுத்துறை வங்கிகள் கடந்த 2015-16 முதல் 2024-25 வரையிலான 10 ஆண்டுகள் ரூ.12 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பொதுத்துறை வங்கிகள் ரூ.5.82 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் பாரத ஸ்டேட் வங்கி ரூ.1.14 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. எஸ்.பி.ஐ.க்கு அடுத்தபடியாக யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ரூ.85, 540 கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி கடந்த 5 ஆண்டுகளில் ரூ.8, 1243 கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. அதே போல் கனரா வங்கி ரூ.56, 491 கோடியும், பேங் ஆப் பரோடா ரூ.70,061 கோடி கடன்களையும் கடந்த 5 ஆண்டுகளில் தள்ளுபடி செய்துள்ளன.மேலும் பொதுத்துறை வங்கிகள் 1,600க்கும் மேற்பட்ட பெருநிறுவனக் கடன் வாங்குபவர்களை கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களாக வகைப்படுத்தியுள்ளன, அவர்கள் கிட்டத்தட்ட 1.63 லட்சம் கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாமல் உள்ளனர்."இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News