வங்கிகளின் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
டெல்லி: வங்கிகளின் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ஆர்.பி.ஐ. கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவீதமாக நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆர்.பி.ஐ., வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம், ரெப்போ வட்டி விகிதம் எனப்படும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து சில முக்கியமான முடிவுகளை எடுக்கும்.
அதன்படி இன்று (ஆக.06) ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவீதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது: பிப்ரவரி முதல் முறையாக ரெப்போ வட்டி விகிதம் 1
சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. வளர்ந்து வரும் பொருளாதார, நிதி முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால தொலைநோக்கு பார்வை அடிப்படையில் ரெப்போ வட்டி விகிதத்தை 5.5% ஆக மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.