தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.17,000 கோடி வங்கி கடன் மோசடி வழக்கு தொழிலதிபர் அனில் அம்பானி நவ.14 ஆஜராக வேண்டும்: ஈடி மீண்டும் சம்மன்

புதுடெல்லி: தொழிலதிபர் அனில் அம்பானி. இவர் தன் நிறுவனங்களின் பெயரில் வாங்கிய வங்கி கடன்களை சட்ட விரோதமாக பிற நிறுவனங்களுக்கு பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ), வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், இந்த மோசடி குறித்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையில் பாரத ஸ்டேட் வங்கியில் பல்வேறு நிறுவனங்களின் பெயரில் வாங்கப்பட்ட ரூ.17,000 கோடி அளவிலான பணம் சட்டவிரோதமாக மாற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் அனில் அம்பானியிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, அனில் அம்பானி வௌிநாடுகளுக்கு செல்ல தடை விதித்தது. இதன் தொடர்ச்சியாக ரூ.7,500 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த விவகாரத்தில் மத்திய கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகமும் விசாரணையை தொடங்கி உள்ளது. இந்நிலையில் வரும் 14ம் தேதி அனில் அம்பானி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை இரண்டாம் முறை சம்மன் அனுப்பி உள்ளது.

Advertisement

Advertisement

Related News