தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வங்கியில்ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக திருப்பூர் பல் டாக்டரிடம்ரூ.70 லட்சம் மோசடி: போலீசார் விசாரணை

கோவை: திருப்பூர் கல்லூரி சாலை திருவிக நகரை சேர்ந்தவர் கிஷோர்குமார் (45). டாக்டர். இவர் திருப்பூர்- அவிநாசி சாலை புஷ்பா தியேட்டர் அருகே பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். மேலும் சென்னை, கோவையில் இதன் கிளை உள்ளது. தமிழ்நாட்டில் பல இடங்களில் விரிவுபடுத்த திட்டமிட்டார். அதற்கு வங்கி கடனுக்கு முயற்சி செய்து வந்தார். இந்நிலையில், அவருக்கு கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த சக்திவேல் (40) என்பவரின் அறிமுகம் ஏற்பட்டது. அப்போது சக்திவேல், ஒரு ரூபாய் வட்டி விகிதத்தில் வங்கியில் ரூ.15 கோடி பெற்று தருவதாக உறுதியளித்தார். மேலும் இதற்கு கமிஷன் பணம் கேட்டுள்ளார்.
Advertisement

இந்நிலையில், கடந்த 22.12.2023 முதல் 5.9.2024 வரை டாக்டர் கிஷோர்குமார் ரூ.69.75 லட்சத்தை கமிஷன் தொகையாக சக்திவேலிடம் கொடுத்துள்ளார். ஆனால் நீண்டநாட்கள் வங்கியில் கடன் பெற்று தருவதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த கிஷோர்குமார், சக்திவேலிடம் பணத்தை திருப்பி கேட்டார். கொடுக்க மறுத்து மிரட்டினார். இதுகுறித்து கிஷோர்குமார். கோவை ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News