வங்கிகளில் உரிமை கோரப்படாத ரூ.58,331 கோடி டெபாசிட் தொகை, முதலீட்டாளர் விழிப்புணர்வு நிதியத்துக்கு மாற்றம்!!
மும்பை : 12 பொதுத்துறை வங்கிகளில் உரிமை கோரப்படாத ரூ.58,331 கோடி டெபாசிட் தொகை, முதலீட்டாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதியத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருக்கும் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகளில் உள்ள இருப்பு தொகை முதலீட்டாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு (டிஇஏ) நிதியத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. முதிர்வடைந்த பிறகு பத்தாண்டுகள் வரை யாரும் உரிமை கோராத டெபாசிட்டுகளும் இந்த நிதியத்துக்கு மாற்றப்படுகின்றன. அந்த வகையில் ஜூன் 30, 2025 நிலவரப்படி, எஸ்பிஐ வங்கியில் யாரும் உரிமை கோராத ரூ19,330 கோடி டிஇஏ-க்கு மாற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.6,911 கோடி, கனரா வங்கி ரூ.6,278 கோடி, பரோடா வங்கி ரூ.5,277 கோடி, யூனியன் வங்கி ரூ.5,105 கோடி தொகை டிஇஏ-நிதிய கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது. இவை தவிர, பேங்க் ஆப் இந்தியா (ரூ.3,934 கோடி), இந்தியன் வங்கி (ரூ.3,740 கோடி), ஐஓபி (ரூ.2,386 கோடி), சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா (ரூ.2,092 கோடி), யூகோ வங்கி (ரூ.1,312 கோடி) ஆகிய வங்கிகளில்இருந்தும் உரிமை கோரப்படாத தொகை டிஇஏ-க்கு மாற்றப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அளவில் 12 பொதுத் துறை வங்கிகளில் இருந்த ரூ.58,331 கோடி டெபாசிட்டுகள் டிஇஏ-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.