வங்கதேச விமான விபத்து பலி எண்ணிக்கை 31 ஆனது: அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்
Advertisement
இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக நேற்று வங்கதேசம் முழுவதும் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்பட்டது. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய வங்கதேச விமானப்படையால் உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே விமான விபத்து நடந்த இடத்தை பார்க்க இடைக்கால அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் அங்கு சென்றனர். அப்போது அங்கு திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் முற்றுகையிட்டனர். அவர்களை ராணுவத்தினர் மீட்டனர்.
Advertisement