தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வங்கதேச மாஜி பிரதமர் ஹசீனா தேர்தலில் வாக்களிக்க தடை

டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் வாக்களிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த மாணவர்களின் போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்ந்தது. மாணவர் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதையடுத்து ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவுக்கு தப்பி வந்தார்.

Advertisement

இதனால் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வங்கதேசத்தில் பொது தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அடுத்த ஆண்டு நடக்க உள்ள தேர்தலில்,முன்னாள் பிரதமர் ஹசீனா,தேர்தலில் வாக்களிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வங்கதேச தேர்தல் ஆணைய செயலாளர் அக்தார் அகமது, ‘‘வெளிநாட்டில் வசிக்கிறவர்களில் யாருடைய தேசிய அடையாள அட்டைகள்(என்ஐடி) முடக்கப்பட்டுள்ளதோ அவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது.

ஹசீனாவின் என்ஐடி அட்டை முடக்கி வைக்கப்பட்டுள்ளது’’ என்றார். வங்கதேசத்தின் டாக்கா டிரிபியூன் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், ஹசீனா,அவரது மகன் சஜீப் வாஜெத்,மகள் சைமா வாஜெத் ஆகியோர் வாக்களிக்க முடியாது. ஹசீனாவின் சகோதரி ரெஹனா, அவருடைய மகள்கள் துலிப் ரிஸ்வானா சித்திக், அஸ்மினா சித்திக் உள்பட அவருடைய உறவினர்கள் பலர் வாக்களிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Related News