தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை: 105 பேர் பலி; நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு

டாக்கா: வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறை காரணமாக பதற்றமான சூழல் நிலவுவதால் வங்கதேச அரசு ராணுவ வீரர்களை குவித்தது. வங்கதேசத்தில் அரசின் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். மேலும் கண்ணீர் புகை குண்டு வீசியும் கூட்டத்தை கலைத்தனர்.
Advertisement

வங்கதேசத்தில் பாகிஸ்தானுடனான போரின்போது உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் நடைமுறையை அரசு பின்பற்றி வந்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடந்த 2018ம் ஆண்டு இந்த இடஒதுக்கீடு முறை நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் 30 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்துவதற்கு வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாரபட்சமான இந்த இட ஒதுக்கீட்டை தகுதி அடிப்படையில் மாற்றவும் கோரிக்கைகள் வலுத்துள்ளது. இதனால் வங்கதேசத்தில் கடந்த ஒரு வாரமாக போராட்டங்கள் நடந்து வந்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர்.

கடந்த திங்கள் முதல் இந்த போராட்டம் தீவிரமடைந்து பல்வேறு மாணவர் அமைப்புக்களும் போராட்டத்தில் குதித்தன. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அரசு தொலைக்காட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வெளியே திரண்ட போராட்டக்காரர்கள் அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த எல்லைப்பாதுகாப்பு படையினர் போராட்டகாரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார். மேலும் ஒலி எழுப்பும் குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகைகுண்டு மற்றும் ரப்பர் குண்டுகளால் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். இதனிடையே போராட்டத்தில் 22 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று காலை தலைநகர் டாக்காவில் இன்டர்நெட் மற்றும் செல்போன் சேவை முடக்கப்பட்டது.

வன்முறை வெடித்ததை அடுத்து இன்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறை காரணமாக பதற்றமான சூழல் நிலவுவதால் வங்கதேச அரசு ராணுவ வீரர்களை குவித்துள்ளது. வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் இதுவரை 105 பேர் உயிரிழந்தனர்.

Advertisement

Related News