தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வங்கதேசத்தில் வெள்ளத்திலும் பள்ளி மாணவர்களைத் தேடி வரும் மிதக்கும் படகு வகுப்புகள்: ஆர்வமாக கல்வி பயிலும் மாணவர்கள்!

டாக்கா: வங்கதேசத்தில் கனமழை ஏராளமான கிராமங்களை மூழ்கடித்த நிலையில், பெரும் வெள்ளத்திலும் பள்ளி மாணவர்களுக்கு கை கொடுக்கின்றன மிதக்கும் வகுப்பறைகள். தண்ணீர் பரப்பில் தேர் போல் மெல்ல மிதந்து செல்லும் இது சுற்றுலா படகு அல்ல. மழை, வெள்ளம் ஏற்படும் காலங்களிலும் குழந்தைகள் கல்வியை தொடர வலம்வரும் மிதக்கும் பள்ளிகள் இவை. சமீபத்தில் பெய்த கனமழையால் மேற்கு சலான் படுகையில் உள்ள பங்குரா கிராமத்தில் வீடுகள் மூழ்கி விட்டதால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை.

Advertisement

ஆனால் பெரும் வெள்ளத்திலும் கல்வியை தொடரும் வகையில் படகுகளில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் பள்ளிகளில் மாணாக்கர்கள் கல்வியை தொடர்ந்து வருகின்றனர். வெள்ளத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதை அறிந்த தன்னார்வலர் அமைப்பு ஒன்று ஆசிரியர்களின் பங்களிப்புடன் இயங்கும் 25க்கும் மேற்பட்ட படகுகளை நடமாடும் வகுப்பறைகளாக மாற்றி இருக்கிறது. சூரிய ஒளி ஆற்றல் மூலம் படகுகளில் மின் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தன்னார்வலர்களின் மிதக்கும் பள்ளிகளால் வறுமை மற்றும் சமூக காரணங்களால் பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்களும் பயனடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News