பெங்களூருவுக்கு கடத்தப்பட இருந்த 35 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: லாரி ஓட்டுநர் உட்பட 4 பேர் கைது
Advertisement
அப்போது வேலூர் அருகே சந்தேகத்திற்கு இடமாக வந்த பாரஸ்ட் லாரி மற்றும் அதன் பின் வந்த காரை சோதனையிட்டபோது சுமார் 35 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதை அடுத்து லாரியை ஓட்டி வந்த செஞ்சி சண்முகம், மோகன், அதன் உரிமையாளர் சங்கர் மற்றும் லாரி கிளீனர் ஹரி கிருஷ்ணன் ஆகியோரை சிவில் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு மூலையாக செயல்பட்ட செஞ்சி சண்முகம் என்பவர் ஏற்கனவே பலமுறை ரேஷன் அரிசி கடத்தி கைது செய்யப்பட்டுள்ளார் என சிவில் சப்ளை சிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சிலரை சிவில் சப்ளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Advertisement