தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாழைப்பழத்தில் விஷம் கலந்து 2 குழந்தைகளை கொன்று தந்தை தூக்கிட்டு தற்கொலை: மனைவி வெளிநாடு வேலைக்கு சென்றதால் விபரீதம்

பணகுடி: நெல்லை மாவட்டம், பணகுடி அருகே தர்மபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (41). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி உமா (37). இவர்களுக்கு ராபின் எபநேசர் (14) என்ற மகனும், காவ்யா (10) என்ற மகளும் உண்டு. எபநேசர் 6ம் வகுப்பும், காவ்யா 4ம் வகுப்பும் படித்து வந்தனர். கடந்த 10 மாதங்களுக்கு முன் ரமேஷ் மனைவி உமா வீட்டு வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளார். இதுதொடர்பாக கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் உமா அங்கேயே தங்கி விட்டார். இந்நிலையில் தனது குழந்தைகளுடன் ரமேஷ் தனியாக வசித்து வந்தார். இருப்பினும் உமாவை வேலையை விட்டு வருமாறு அவரது கணவர் செல்போனில் கூறி வந்துள்ளார். இந்த சூழலில் நேற்று முன்தினம் மீண்டும் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாம். இதனால் ரமேஷ் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு குழந்தைகளுடன் தூங்கச் சென்ற ரமேஷ் வீட்டின் கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் அவர்களது வீட்டு கதவை தட்டி பார்த்தனர். யாரும் கதவை திறக்கவில்லை.
Advertisement

இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த போது மூவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்ததை பார்த்து உடனடியாக போலீசாருக்கு தகவல் ெதரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வந்து வீட்டின் கதவை உடைத்து 3 பேர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த ரமேஷ் குழந்தைகளுக்கு வாழைப்பழத்தில் விஷத்தை வைத்து கொடுத்து, அவர்கள் மயங்கியதும் தூக்கில் தொங்க விட்டுள்ளார். பின்னர் தானும் வாழைப்பழத்தில் விஷத்தை சாப்பிட்டு விட்டு தூக்கில் தொங்கியுள்ளார் என தெரியவந்தது.

Advertisement

Related News