தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சரஸ்வதி பூஜையையொட்டி மார்க்கெட்டில் வாழைத்தார் விலை உயர்வு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மார்க்கெட்டில் நேற்று வாழைத்தார் வரத்து ஓரளவு இருந்தாலும் சரஸ்வதி பூஜையையொட்டி கூடுதல் விலைக்கு விற்பனையானதாக தெரிவித்தனர்.

Advertisement

பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டின் ஒரு பகுதியில் வாரத்தில் குறிப்பிட்ட நாட்கள் நடக்கும் வாழைத்தார் மொத்த விற்பனையின் போது, சுற்று வட்டார கிராமம் மற்றும் தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வாழைத்தார்கள் கொண்டு வரப்படுகிறது.

அதனை, உள்ளூர் வியாபாரிகள் மற்றும் கேரள வியாபாரிகள் நேரில் வந்து குறிப்பிட்ட விலை நிர்ணயித்து வாங்கி செல்கின்றனர். தென்மேற்கு பருவமழைக்கு முன்னதாக மே மாதத்தில் பல இடங்களில் சாகுபடி செய்யப்பட்ட வாழைத்தார்கள் நல்ல விளைச்சலடைந்த நிலையில் இருந்ததால் அறுவடை பணி அதிகமானது. தற்போது மழைக்குறைவால், கடந்த சில வாரமாக வாழை அறுவடை பணி மேலும் தொடர்ந்திருந்தது.

இந்த வாரத்தில் நேற்று நடந்த வாழைத்தார் விற்பனையின்போது, சுற்றுவட்டார பகுதியிலிருந்தே ஓரளவு வாழைத்தார்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. மேலும், திருச்சி மற்றும் தூத்துக்குடி பகுதியிலிருந்தும் வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. இருப்பினும் வரும் 1ம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் 2ம் தேதி தேதி விஜயதசமி என்பதால் அனைத்து ரக வாழைத்தார்களும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

இதில், செவ்வாழைத்தார் ஒரு கிலோ ரூ.65 வரையிலும், மோரீஸ் ரூ.40க்கும், பூவன்தார் ரூ.40க்கும், கற்பூரவள்ளி ரூ.42க்கும், கேரள ரஸ்தாளி ரூ.45 வரையிலும் என அனைத்து வாழைத்தார்களும் கூடுதல் விலைக்கு விற்பனையாகியுள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement