தடைசெய்யப்பட்ட போனுடன் சிக்கிய அமெரிக்க மாணவன்
Advertisement
அவரை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்தபோது, இந்தியாவில் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போன் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், ஒக்லே ஜாக்சன், அமெரிக்க பல்கலைக்கழக மாணவன் என்றும், அமெரிக்காவில் சாட்டிலைட் போனுக்கு தடை எதுவும் கிடையாது என்றும் கூறினார். டெல்லிக்கும் சாட்டிலைட் போனுடன் தான் வந்ததாகவும் அங்கு யாரும் தடுக்கவில்லை என்று கூறினார்.
இதனை ஏற்க மறுத்த அதிகாரிகள், அவரது பயணத்தை ரத்து செய்தனர். மேலும், சாட்டிலைட் போனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, ஒக்லே ஜாக்சனை சென்னை விமான நிலைய போலீசாரிடம் நேற்று ஒப்படைத்தனர். இதையடுத்து, அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், சென்னையில் இருந்தபடி சாட்டிலைட் போன் மூலமாக அவர் யாருடன் பேசியுள்ளார், என்று ஆய்வு செய்து வருகின்றனர்.
Advertisement