தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தடைசெய்யப்பட்ட போனுடன் சிக்கிய அமெரிக்க மாணவன்

சென்னை: சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஸ்கூட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. பயணிகளின் உடைமைகளை சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒக்லே ஜாக்சன் (22) என்பவர், இந்த விமானத்தில் சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியா நாட்டிற்கு செல்ல வந்தார்.
Advertisement

அவரை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்தபோது, இந்தியாவில் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போன் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், ஒக்லே ஜாக்சன், அமெரிக்க பல்கலைக்கழக மாணவன் என்றும், அமெரிக்காவில் சாட்டிலைட் போனுக்கு தடை எதுவும் கிடையாது என்றும் கூறினார். டெல்லிக்கும் சாட்டிலைட் போனுடன் தான் வந்ததாகவும் அங்கு யாரும் தடுக்கவில்லை என்று கூறினார்.

இதனை ஏற்க மறுத்த அதிகாரிகள், அவரது பயணத்தை ரத்து செய்தனர். மேலும், சாட்டிலைட் போனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, ஒக்லே ஜாக்சனை சென்னை விமான நிலைய போலீசாரிடம் நேற்று ஒப்படைத்தனர். இதையடுத்து, அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், சென்னையில் இருந்தபடி சாட்டிலைட் போன் மூலமாக அவர் யாருடன் பேசியுள்ளார், என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisement

Related News