தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தடையை மீறி பிடித்த மீன்கள் பறிமுதல்: அதிகாரிகள் அதிரடி; மீனவர்களுக்கு எச்சரிக்கை

தொண்டி: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடலில் தடை உத்தரவை மீறி மீன்பிடித்தவர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து, மீன்களை பறிமுதல் செய்தனர். வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், 3 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்நிலையில், தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மீனவர்கள் சிலர் தடை உத்தரவை மீறி கடலுக்கு மீன்பிடிக்க செல்வதாகவும், பிடித்த மீன்களை மார்க்கெட்டில் விற்பதாகவும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

Advertisement

இதையடுத்து இன்று காலை தொண்டி மீன்மார்கெட்டில் மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாஹிர் மற்றும் போலீசார் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது, கடலில் தடையை மீறி பிடித்து விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட மீன்களை பறிமுதல் செய்தனர். தடை உத்தரவை மீறி கடலுக்கு செல்லக்கூடாது எனவும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். அப்போது மீனவர்கள் சிலர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், `வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறி மீன் பிடிக்க செல்வோருக்கு அபதாரம் விதிக்கப்படும். மேலும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் அரசின் நிவாரண உதவிகளும் நிறுத்தப்படும்’ என எச்சரிக்கை விடுத்தனர்.

Advertisement

Related News