தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அய்யலூரில் ரூ.3.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

வேடசந்தூர்: பக்ரீத் பண்டிகையையொட்டி அய்யலூர் ஆட்டு சந்தையில் இன்று சுமார் ரூ.3.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் வாரம்தோறும் வியாழக்கிழமை ஆடு, கோழி சந்தை நடைபெறும். திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற சந்தையாக அய்யலூர் ஆட்டுசந்தை திகழ்கிறது. இந்த சந்தைக்கு திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் வருகின்றனர். இவர்கள் ஆடு மற்றும் கோழிகளை மொத்தமாக விலைக்கு வாங்கி செல்வது வழக்கம். வரும் 17ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இன்று அய்யலூரில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் விற்பனை வழக்கத்தைவிட களைகட்டியது. அதிகாலை 3 மணி முதலே ஏராளமான வியாபாரிகளும், விவசாயிகளும் குவிந்ததால் சந்தையில் கூட்டம் அலை மோதியது.
Advertisement

வியாபாரிகள் போட்டிபோட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கி வண்டிகளில் ஏற்றிச் சென்றனர். வெள்ளாடுகளை விட செம்மறி ஆடுகள் அதிகளவில் விற்பனை ஆனது. திடகாத்திரமான கிடா ஆடுகள் ரூ.40 ஆயிரம் வரை விற்கப்பட்டன. 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு ரூ.8 ஆயிரம், செம்மறி ஆடு ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டன. நாட்டுக்கோழி ரூ.450 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று ஆட்டுச் சந்தையில் விற்பனை நல்ல முறையில் இருந்தது. இன்று ஒரே நாளில் ரூ.3.50 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். இதேபோல, ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆட்டு சந்தையில் சுமார் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.

Advertisement

Related News