பக்ரீத் பண்டிகையால் களைகட்டிய திருப்புவனம் ஆட்டுச்சந்தை ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
Advertisement
ஆடுகளை வாங்க உள்ளூர் வியாபாரிகள் மட்டுமல்லாமல், பிற மாவட்டங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். இதனால் ஆடுகளின் விலையும் அதிகரித்திருந்தது. எடைக்கு ஏற்ப ஒரு ஆடு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்பனையானது. இதுகுறித்து ஆட்டு வியாபாரிகள் கூறுகையில், ‘‘ஜூன் 17ம் தேதி பக்ரீத் பண்டிகை வருகிறது. இதனால், ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டு விலை அதிகரித்தது. ஆடுகளும் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது. சந்தையில் இன்று (நேற்று) மட்டும் விற்பனை ரூ.1 கோடியை தாண்டியது’’ என்றனர்.
Advertisement