தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பக்ரீத் பண்டிகையால் களைகட்டிய திருப்புவனம் ஆட்டுச்சந்தை ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

Advertisement

திருப்புவனம் : பக்ரீத் பண்டிகையையொட்டி திருப்புவனம் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறும். இதில் ஆடு, கோழி விற்பனை தவிர, காய்கறி சந்தையும் நடக்கும். வரும் 17ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று காலை ஆட்டுச்சந்தை களைகட்டியது. மதுரை, திருச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வெள்ளாடு, செம்மறி ஆடு என 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

ஆடுகளை வாங்க உள்ளூர் வியாபாரிகள் மட்டுமல்லாமல், பிற மாவட்டங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். இதனால் ஆடுகளின் விலையும் அதிகரித்திருந்தது. எடைக்கு ஏற்ப ஒரு ஆடு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்பனையானது. இதுகுறித்து ஆட்டு வியாபாரிகள் கூறுகையில், ‘‘ஜூன் 17ம் தேதி பக்ரீத் பண்டிகை வருகிறது. இதனால், ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டு விலை அதிகரித்தது. ஆடுகளும் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது. சந்தையில் இன்று (நேற்று) மட்டும் விற்பனை ரூ.1 கோடியை தாண்டியது’’ என்றனர்.

Advertisement