பக்ரீத் பண்டிகையை ஒட்டி களைகட்டிய ஆட்டுச் சந்தை.. ஆடுகள் வரத்து அதிகரிப்பு, விலையும் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் அத்தியூர் வாரச்சந்தையில் ரூ.2.40 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இன்று நடைபெற்ற சந்தையில் அதிகளவில் செம்மறி, வெள்ளாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஆட்டுச் சந்தைக்கு ஏராளமானோர் வந்திருந்த நிலையில், நாகர்கோவில் நெடுஞ்சாலை முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணி வகுத்து நின்றதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பின்னர் காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்ததால் வாகனங்கள் மெதுவாக நகர்ந்து சென்றனர்.