தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பக்ரீத் பண்டிகையை ஒட்டி களைகட்டிய ஆட்டுச் சந்தை.. ஆடுகள் வரத்து அதிகரிப்பு, விலையும் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி!!

சிவகங்கை: பக்ரீத் பண்டிகை, தொடர் முகூர்த்த நாட்களையொட்டி சிவகங்கை, கள்ளக்குறிச்சி, நெல்லை மாவட்ட கால்நடை சந்தையின் விற்பனை களைகட்டியது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கால்நடை சந்தையில் 5,000க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகள் விற்பனையாகின. இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வருவர். அதை தொடர்ந்து வருகின்ற 7ம் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால் சந்தைக்கு ஏராளமான மக்கள் ஆடுகளை வாங்க குவிந்தனர். ஆடுகளின் விலை கிடுகிடுவென உயர்ந்திருந்தாலும் வியாபாரிகள் அதிகளவில் வாங்கி சென்றனர். குறிப்பாக 35 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.40,000க்கு விற்பனையானதால் விவசாயி மகிழ்ச்சி அடைந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் அத்தியூர் வாரச்சந்தையில் ரூ.2.40 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இன்று நடைபெற்ற சந்தையில் அதிகளவில் செம்மறி, வெள்ளாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஆட்டுச் சந்தைக்கு ஏராளமானோர் வந்திருந்த நிலையில், நாகர்கோவில் நெடுஞ்சாலை முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணி வகுத்து நின்றதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பின்னர் காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்ததால் வாகனங்கள் மெதுவாக நகர்ந்து சென்றனர்.