தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜாமீன் என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு; அடிப்படை கொள்கை மறக்கப்பட்டு வருகிறது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை

Advertisement

கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: ஜாமீன் என்பது விதி; சிறை என்பது விதிவிலக்கு என்பது இந்திய நீதித்துறையின் முக்கியமான அடிப்படைக் கொள்கையாகும். புகழ்பெற்ற நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் போன்றோரால் இந்தக் கொள்கை வலுவாக நிலைநிறுத்தப்பட்டது. விசாரணைக் கைதிகளை நீண்ட காலம் சிறையில் வைப்பதை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் போன்ற கடுமையான சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்குக் கூட, விசாரணை தாமதமானால் ஜாமீன் வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறியுள்ளது.

கடுமையான குற்ற வழக்குகளிலும், ஜாமீன் வழங்குவதற்கான முகாந்திரம் இருந்தால் தாராளமாக ஜாமீன் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றங்களுக்கும், கீழமை நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அந்த அடிப்படைக் கொள்கை சமீப காலமாக மறக்கப்பட்டு வருகிறது. நீதிமன்றத் தீர்ப்புகள் இந்தக் கொள்கையை வலியுறுத்தினாலும், சமீப காலமாக அவை செயல்படுத்தப்படவில்லை. கடந்த 2024ம் ஆண்டில், மணீஷ் சிசோடியா, பிரபிர் புர்கயஸ்தா மற்றும் கவிதா போன்றோரின் வழக்குகளில் ஜாமீன் வழங்கியதன் மூலம், இந்தக் கொள்கையை மீண்டும் நிலைநிறுத்த முயன்றோம். எனது இந்த நடவடிக்கைகள், உயர் நீதிமன்றங்களும், கீழமை நீதிமன்றங்களும் பின்பற்ற ஒரு வழிகாட்டுதலாக அமையும் என நம்புகிறேன். அதேநேரம் நீதித்துறை செயல்பாடு வரம்பு மீறுதலாக மாறிவிடக்கூடாது. இவ்வாறு அவர் அறிவுறுத்தினார்.

Advertisement