தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மோசமான வானிலை காரணமாக அந்தமான் விமானம் சென்னை திரும்பியது

சென்னை: சென்னையில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் நேற்று காலை 7.25 மணியளவில் அந்தமான் புறப்பட்டு சென்றது. விமானத்தில் 174 பயணிகள், 6 விமான ஊழியர்கள் உள்பட 180 பேர் இருந்தனர். விமானம் நேற்று காலை 9.30 மணியளவில், அந்தமான் வான்வெளியை சென்றடைந்தது. அப்போது மோசமான வானிலை நிலவியதால் அந்தமான் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து பறந்தது.

Advertisement

இதனால் அந்த விமானம், அந்தமான் வான்வெளியிலிருந்து, சென்னைக்கு அவசரமாக திரும்பி வந்து சென்னை விமான நிலையத்தில் பகல் 11.40 மணியளவில் பத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் 174 பேரும் விமானத்துக்குள்ளையே அமர வைக்கப்பட்டனர். அந்தமானில் வானிலை சீரடைந்ததும் விமானம் மீண்டும், அந்தமான் புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதேபோல், அந்தமான் விமான நிலையத்தில் சென்னை வருவதற்காக 160 பயணிகள் காத்திருந்தனர்.

இது சம்பந்தமாக விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், மோசமான வானிலை காரணமாக, அந்தமானில் தரையிறங்க முடியாமல் விமானம் சென்னைக்கு திரும்பி வந்துவிட்டது. அங்கு வானிலை சீரடைந்ததும் விமானம் மீண்டும் அந்தமான் புறப்பட்டு செல்லும் என்றனர்.

Advertisement