தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பேக் டு பேக் சென்சுரி அடித்து சஞ்சு சாம்சன் அமர்க்களம்: டி20 போட்டியில் சாதித்த முதல் இந்திய வீரர்

Advertisement

டர்பன்: சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக இரு முறை சென்சுரி விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். சூர்யகுமார் யாதவ் தலைமையில் தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. நேற்று முன்தினம் இரவு டர்பன் நகரில் நடந்த போட்டியில் இந்திய அணி அதிரடியாக விளையாடி, 8 விக். இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய தென் ஆப்ரிக்கா அணி, 17.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 141 ரன் மட்டுமே எடுத்தது. இதனால், 61 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி இமாலய வெற்றி பெற்றது.

சமீபத்தில் நியுசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒயிட் வாஷ் ஆனதால் துவண்டிருந்த இந்திய ரசிகர்களுக்கு, டி20 போட்டியில் பெற்ற வெற்றி குதுாகலத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் துவக்கம் முதலே அதிரடியாக ஆடி எதிரணியை கலங்கடித்தார். அவர், 10 சிக்சர், 7 பவுண்டரிகள் விளாசி, 50 பந்துகளில் 107 ரன்களை குவித்தார். அவரது நேர்த்தியான ஆட்டத்தால், 14 ஓவர்களிலேயே அணியின் ஸ்கோர் 163/2 ஆக உயர்ந்தது. சஞ்சு அமைத்து தந்த வலுவான அடித்தளத்தால் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை ஊதித் தள்ளியது.

இந்த போட்டியில் அடித்த சென்சுரி மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக இரு முறை சென்சுரி விளாசிய முதல் இந்திய வீரர் என்ற அரிய சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். இதற்கு முன், வங்கதேச அணியுடன் நடந்த டி20 போட்டியிலும் சஞ்சு அபாரமாக ஆடி சென்சுரி அடித்தார். அந்த சென்சுரியால், இந்திய அணி 297/6 என்ற பிரம்மாண்ட ஸ்கோரை எட்டியது. வங்கதேச அணியை துவம்சம் செய்யவும் அவரது சென்சுரி உதவியது.

டி20 போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக, 50க்கு மேலான ரன்களை அதிகளவில் குவித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் சஞ்சு நிகழ்த்தி உள்ளார். முன்னாள் கிரிக்கெட் கேப்டன் எம்எஸ் தோனி, ரிஷப் பண்ட் ஆகியோர், இதுவரை இரு முறை மட்டுமே, 50க்கு கூடுதலாக ரன் எடுத்துள்ளனர். சஞ்சு சாம்சன், 3வது முறையாக, 50க்கு மேல் ரன் எடுத்த விக்கெட் கீப்பராக உருவெடுத்துள்ளார். இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையிலான 2வது டி20 போட்டி தென் ஆப்ரிக்காவின் கெபேரா நகரில் இன்று இந்திய நேரப்படி இரவு 7:30க்கு நடக்கிறது.

சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சி

‘முந்தைய போட்டிகளில் சரியாக ஆடாததால், சிரமமான மனநிலையில் இருந்தபோது, கேப்டன் சூர்யகுமார் யாதவும், தலைமை கோச் கவுதம் காம்பீரும், தொலைபேசியில் ஆறுதல் கூறினர். அவர்கள் அளித்த உற்சாகத்தால் தென் ஆப்ரிக்காவுடனான டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட முடிந்தது’ என சாதனை வீரர் சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.

Advertisement