தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண் குழந்தையை ₹1 லட்சத்துக்கு விற்ற தாய் உள்பட 3 பெண்கள் கைது

கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம், சாமிசெட்டிபாளையம் அருகே சின்னக்கண்ணாபுதுரை சேர்ந்தவர் ஆதிகணேஷ். இவரது மனைவி நந்தினி (22). இவர்களுக்கு மோகித் (3) என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 14ம் தேதி இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. நந்தினி வேலை பார்க்கும் தனியார் பனியன் நிறுவனத்தில் கஸ்தூரிபாளையம் சத்யாநகரைச் சேர்ந்த தேவிகா (42) என்பவரும் வேலை செய்து வருகிறார்.
Advertisement

தேவிகாவின் உறவினரான கவுண்டம்பாளையம், மாந்தோப்பு பகுதியை சேர்ந்த மகேஸ்வரன்-அனிதா (40) தம்பதிக்கு நீண்டகாலமாக குழந்தை இல்லை. நந்தினியின் குடும்ப சூழ்நிலையை அறிந்த தேவிகா, குழந்தையை கேட்டு பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து ₹1 லட்சத்தை பெற்றுக்கொண்டு பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தையை நந்தினி விற்றதாக தெரிகிறது.

இது குறித்து தகவலறிந்த சைல்டு ஹெல்ப் லைன் ஒருங்கிணைப்பாளர் ஏஞ்சலின் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி, தாய் நந்தினி, தேவிகா (42), அனிதா (40) ஆகிய 3 பெண்களையும் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 3 பெண்களையும் போலீசார் கைது செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News