தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள் விட்டுச்சென்ற துணி கழிவுகள் அகற்றம்: மணிமுத்தாறு பட்டாலியன் போலீசார் நடவடிக்கை

வி.கே.புரம்: பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள் விட்டுச் சென்ற துணி கழிவுகளை மணிமுத்தாறு பட்டாலியன் போலீசார் அகற்றினர்.நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் வரலாற்று சிறப்பு மிக்க பாபநாச சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் பரிகாரம் செய்து தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி தங்களுடைய ஆடைகளை களைந்து தண்ணீரில் விட்டு செல்கின்றனர்.
Advertisement

இதனால் தாமிரபரணி ஆறு மாசுபடுவதோடு துணிகள் குளிப்பவர்களின் காலில் சிக்கி ஆபத்தை ஏற்படுத்துகிறது. இந்த துணிகளை களைந்து போடுவதற்காக ஆற்றங்கரையில் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் அதை புறக்கணித்து ஆற்றினுள்ளேயே தொடர்ந்து துணிகளை களைந்து போட்டு செல்கின்றனர்.

இதையடுத்து தன்னார்வ அமைப்புகள் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் அவ்வப்போது ஆற்றினுள் குவிந்து கிடக்கும் துணி கழிவுகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு முறையும் டன் கணக்கில் துணி கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மணிமுத்தாறு பட்டாலியன் 9ம் அணி தளவாய் கார்த்திகேயன் வழிகாட்டுதலின்படி மணிமுத்தாறு பட்டாலியன் 12ம் அணி உதவித் தளவாய் ரவி முன்னிலையில் பாபநாசம் ஆற்றங்கரையோரத்தில் பொதுமக்களால் ஆற்றில் விடப்பட்ட பழைய துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றும் பணியில் மணிமுத்தாறு பட்டாலியன் போலீசார் ஈடுபட்டனர். ஆற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட பழைய துணி கழிவுகள் மூட்டை கட்டி அகற்றப்பட்டது.

 

Advertisement