தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆழ்வார்குறிச்சி அருகே பிளாஸ்டிக் கம்பெனியில் பயங்கர தீ விபத்து: ரூ.பல லட்சம் பொருள் எரிந்து நாசம்

கடையம்: தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள பூவன்குறிச்சி என்ற கிராமத்தில் நெல்லை மாவட்டம் வி.கே. புரத்தைச் சேர்ந்த செய்யது அலி என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோன் செயல்பட்டு வருகிறது. இங்கு 10க்கும் மேற்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் இன்று (வெள்ளி) அதிகாலை இந்த பிளாஸ்டிக் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது, கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மள மளவென பரவியதால் உடனடியாக ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் முதலில் அம்பை தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்திலும் தீப்பற்றி எரிந்ததால் கூடுதலாக சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, தென்காசி, ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.

வீரர்கள் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் தீ கட்டுக்குள் வராததால் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனால் அப்பகுதியை சுற்றி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இந்த தீ விபத்தில் கம்பெனியில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் தீயில் கருகி நாசமானது.

இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Advertisement

Related News