தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஐயப்பன் அறிவோம் 1: ஏன் கார்த்திகை முதல் தேதி?

கார்த்திகை மாதம் இன்று பிறக்கிறது. பொதுவாக, கார்த்திகை என்றாலே தீபத்திருவிழா மனதில் தோன்றும். மற்றொன்று இன்னும் முக்கியமானது. அதுதான் சபரிமலை ஐயப்பனுக்கு மாலையிட்டு விரதம் துவக்கும் நிகழ்ச்சி. அந்தவகையில் கார்த்திகை மாத முதல் நாளான இன்று முதல் ஐயப்பனுக்கு, பல லட்சம் பக்தர்கள் மாலையிட்டு விரதத்தை துவக்குவர். ஏன் ஐயப்பனுக்கு கார்த்திகையில் மாலையிட வேண்டும்? இது ஒரு நல்ல கேள்வி. பொதுவாக, சபரிமலை ஐயப்பன் தரிசனத்தில் மகரஜோதி தரிசனம் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

Advertisement

இதற்கு கார்த்திகை முதல் தேதியில் விரதம் துவக்குவதே சரியாக இருக்கும் என்ற அடிப்படையிலே துவக்கப்பட்டது என்கின்றனர் ஆன்மிக பெரியவர்கள். சரி... விரதம் பற்றி விபரமாக பார்ப்போம். ஐயப்ப விரதம் இருப்பவர்கள் ஒரு மண்டல விரதம் இருக்க வேண்டும். சபரிமலை கணக்கின் படி, இது 41 நாட்கள். சாஸ்திரத்தின் படி 45 நாட்கள். சித்தர்கள், ஞானிகள் கூற்றின்படி 48 நாட்கள் என கூறுகின்றார். ஆனால், 41 நாட்களாவது கட்டாயம் விரதம் இருப்பது மிகச்சிறந்தது. இன்று மாலையிடுபவர்கள், முதலாவதாக, குருசாமியை பற்றிப் தெரிந்து கொள்வது முக்கியம்.

இடைவிடாமல் 18 ஆண்டுகள் சபரிமலை செல்பவர் குருசாமி ஆவார். இவர்தான் தன்னை சபரிமலை அனுபவத்தில் இளைய சாமிகளுக்கு மாலை அணிவிப்பார். சாமிகள் அணிந்து கொள்ளும் மாலையானது 54 அல்லது 108 என்ற துளசி அல்லது ருத்திராட்ச மணியை கொண்டது. இதில் ஒன்று கூடவோ, குறையவோ கூடாது. அடுத்ததாக கன்னி சாமி. முதன்முதலில் மாலை அணிபவரை இவ்வாறு அழைக்கின்றனர். இவர் ‘கன்னிசாமி’ அடையாளத்திற்காக கருப்பு வேட்டி கட்டவேண்டும். இவர் சபரிமலை செல்ல குடும்பத்தினரின் சம்மதம் கட்டாயம் வேண்டும்.

அதன் பிறகு, கோயிலுக்கு சென்று, குருசாமியை வணங்கி, இறைவனிடம் வைத்த மாலையை பெற வேண்டும். இந்த இருவரை தாண்டி, தொடர்ந்து செல்பவர்களும் உண்டு. 18 ஆண்டுகள் தொடர்ந்து சென்றால் நற்பலன்கள் உண்டு. மாலை அணிந்ததும், பார்க்கும் நபர்களிடம் சாமி சரணம் சொல்லியே பேச்சைத் துவங்க வேண்டும். விரதத்தில் சைவம் மிக மிக கட்டாயம். கேக் கூட தொடக்கூடாது. கடினமான இந்த ஐயப்ப விரதத்தை, கடைபிடித்தல், விரதம் விடும் முறைகளை இனி விரிவாக பார்க்கலாம். தரிசனம் தொடரும்

Advertisement