தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரி மனு: கேரள அரசு, தேவசம் போர்டுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பம்பையில் வரும் 20ம் தேதி சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு நடத்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு தீர்மானித்துள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள தென் மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

Advertisement

இந்நிலையில் இந்த மாநாட்டுக்கு தடை விதிக்க கோரி, ஹைந்தவீயம் என்ற அமைப்பின் சார்பில், கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. திருவிதாங்கூர் தேவசம் போர்டின் பெயரில், கேரள அரசுதான் இந்த மாநாட்டை நடத்துகிறது என்றும், மதசார்பற்ற ஒரு அரசு, ஒரு குறிப்பிட்ட மதத்திற்காக மாநாடு நடத்துவது தவறு என்றும், அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நேற்று நீதிபதிகள் ராஜா விஜயராகவன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து வரும் 10ம் தேதிக்குள் (நாளை) விளக்கம் அளிக்க கேரள அரசுக்கும், திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

Advertisement