தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அய்யலூரில் களைகட்டியது ஆடி ஸ்பெஷல் சந்தையில் ஆடு விற்பனை ரூ.2 கோடி

வேடசந்தூர் : ஆடி மாத கோயில் திருவிழாக்கள் நெருங்கும் நிலையில் அய்யலூரில் நடைபெற்ற சிறப்பு ஆட்டுச்சந்தையில் நேற்று ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனையானது.
Advertisement

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆடு, கோழி சந்தை நடப்பது வழக்கம். இங்கு திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து ஆடு, கோழிகளை ஆர்வமுடன் வாங்கி செல்வர்.

வரும் ஆடி, ஆவணி மாதங்களில் கிராமங்களில் கோயில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதனால் அய்யலூரில் நேற்று காலை நடைபெற்ற சிறப்பு ஆட்டுச்சந்தை களைகட்டியது. அதிகாலை முதலே ஏராளமான கால்நடை வளர்ப்போரும், வியாபாரிகளும் குவிந்தனர். வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு ஆடு, கோழிகளை வாங்கி வாகனங்களில் ஏற்றி சென்றனர்.

10 கிலோ வெள்ளாடு தரத்துக்கேற்ப ரூ.7,000 முதல் ரூ.8,000 வரையிலும், செம்மறி ஆடு ரூ.6,500 முதல் ரூ.7,000 வரையிலும் விற்கப்பட்டது. ஒரு கிலோ எடையுள்ள நாட்டுக்கோழி ரூ.450 முதல் ரூ.550 வரையிலும், சண்டை சேவல்கள் ரூ.15 ஆயிரம் வரையிலும் விற்கப்பட்டது.

நேற்று ஒரே நாளில் மொத்தம் ரூ.2 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், ‘`ஆடி, ஆவணி மாதங்களில் கிராமப்புறங்களில் கோயில் திருவிழாக்கள் அதிகளவில் நடைபெறுவது வழக்கம். இதனால் நேற்று சந்தை களைகட்டியது. வரும் வாரங்களில் சந்தையில் விற்பனை மேலும் சூடு பிடிக்கும்’’ என்றனர்.

Advertisement