ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் இயக்கம்: முன்பதிவு செய்வது எப்போது?
சென்னை: ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளின் போது கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது;
சென்னை சென்ட்ரல் - கன்னியாகுமரி (ரயில் எண். 06151/06152):
டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - கன்னியாகுமரி வாராந்திர சிறப்பு ரயில் (ரயில் எண். 06151) செப்டம்பர் 22, 29, அக்டோபர் 06, 13, 20 (திங்கட்கிழமைகளில்) இரவு 11.50 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 1.20 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
மறுமார்க்கத்தில், கன்னியாகுமரி - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில் (06152) செப்டம்பர் 23, 30, அக்டோபர் 07, 14, 21 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து பிற்பகல் 3.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலை சென்றடையும்.
திருநெல்வேலி - செங்கல்பட்டு (ரயில் எண். 06154/06153):
அதேபோல், திருநெல்வேலி - செங்கல்பட்டு இடையே வாரம் இருமுறை சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (06154) இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் செப்டம்பர் 26, 28, அக்டோபர் 03, 05, 10, 12, 17, 19, 24, 26 (வெள்ளிக்கிழமை) மற்றும் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் அதிகாலை 4 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் மதியம் 1.15 மணிக்கு செங்கல்பட்டை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், செங்கல்பட்டு - திருநெல்வேலி இடையே வாரம் இருமுறை சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (06153) இயக்கப்படுகிறது. இந்த ரயில் செப்டம்பர் 26, 28, 3, அக்டோபர் 5, 10, 12, 17, 19, 24, 26 (வெள்ளிக்கிழமை) மற்றும் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு அன்று இரவு 11.55 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (20ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.