தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.1800 கோடி செலவில் கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோவில் கருவறை மண்டப கூரை ஒழுகுகிறது: ஒரு நாள் மழைக்கே தாக்கு பிடிக்கவில்லை தலைமை பூசாரி பரபரப்பு

அயோத்தி: ரூ.1800 கோடி செலவில் கட்டப்பட்டு பிரதமர் மோடியால் கடந்த ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்ட அயோத்தி ராமர் கோயில் கருவறை மண்டபத்தின் கூரை முதல் மழைக்கே ஒழுகியது. அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோயிலை ரூ.1800 கோடி செலவில் கட்டி அதை கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடி திறந்தார். இந்த நிலையில் உ.பியில் பருவமழை துவங்கி உள்ளது. கடந்த சனிக்கிழமை அயோத்தியில் கன மழை பெய்தது. முதல் மழைக்கே அயோத்தி ராமர் கோயிலின் கருவறை மண்டபத்தின் கூரையில் ஒழுகியது.
Advertisement

இது குறித்து ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் நிருபர்களிடம் கூறுகையில், சனிக்கிழமை நள்ளிரவில் பெய்த முதல் கனமழையில் கோயிலின் கருவறையின் மேற்கூரையில் இருந்து நீர் கசிவு ஏற்பட்டது. குழந்தை ராமர் சிலைக்கு முன் பூசாரி அமர்ந்திருக்கும் இடத்துக்கும், விஐபி தரிசனத்துக்கு மக்கள் வரும் இடத்துக்கும் நேரடியாக மேற்கூரையில் இருந்து மழைநீர் கசிந்தது. ஜனவரி 22ம் தேதி கோவில் திறப்பு விழா நடந்தது. ஆனால், ஒரு நாள் மழைக்கே கூரை ஒழுகுவது சரியல்ல. கோவில் வளாகத்தில் இருந்து மழைநீர் வெளியேறுவதற்கு எந்த ஏற்பாடும் இல்லை என்றார். அயோத்தியில் ராம்பத் சாலை மற்றும் புதிதாக கட்டப்பட்ட பிற சாலைகள் சில இடங்களில் மண்ணில் புதைந்தன.

இதற்கிடையில், உத்தரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தியாகிகளின் சவப்பெட்டியாக இருந்தாலும் சரி, கடவுள் கோவிலாக இருந்தாலும் சரி, இவை அனைத்தும் பா.ஜ.க.வுக்கு ஊழலுக்கான வாய்ப்பாகிவிட்டன. நாட்டில் உள்ள நம்பிக்கை மற்றும் தூய்மையின் சின்னங்கள் கூட அவர்களுக்கு கொள்ளையடிக்கும் வாய்ப்புகள் தான்” என்று கூறியுள்ளார்.

Advertisement

Related News