தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இப்படியும் ஒரு விழிப்புணர்வு மரங்களில் ஆணியை அகற்றி மஞ்சள் பத்து போடும் எஸ்ஐ

ராமநாதபுரம் : மரங்களில் விளம்பர பலகைகளை மாட்டி வைப்பதற்காக அறையப்பட்ட ஆணிகளை அகற்றி சிறப்பு எஸ்ஐ விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு எஸ்ஐ சுபாஷ் சீனிவாசன்.

Advertisement

இயற்கை ஆர்வலரான இவர், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மரங்களில் மாட்டப்பட்டுள்ள விளம்பர பலகைகள், ஆணிகளை ஓய்வு நேரங்களில் அகற்றி வருகிறார். மேலும் ஆணி பிடுங்கிய இடத்தில் மஞ்சள் வைத்து மூடி முதலுதவியும் செய்து வருகிறார்.

இதுகுறித்து சிறப்பு எஸ்ஐ சுபாஷ் சீனிவாசன் கூறும்போது, ‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கடந்த 2023ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

அதன்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் மரத்தின் அவசியம் குறித்து பல்வேறு வழிகளில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். மரங்களால் மழை பெய்யும் அளவு அதிகரிக்கும். குடிநீர் தட்டுப்பாடு குறையும். விவசாயம் செழிக்கும், புவி வெப்பமயமாக்கல் தடுக்கப்படும்.

இவ்வளவு நன்மை செய்யும் மரத்தில் விளம்பர பலகையை மாட்டி வைப்பதற்காக ஆணி அடித்து சேதப்படுத்தி வருவது வேதனையாக உள்ளது. இது சட்டத்திற்கு புறம்பான செயல் ஆகும்.

எனவே மரத்தில் ஆணி அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதை உரிய நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும். அனைத்து தரப்பினரும் மரம் நடுவது மட்டுமின்றி, இருக்கின்ற மரத்தை பாதுகாக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்’’ என்றார்.

Advertisement