சென்னை ஆவடி அருகே வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடி வெடித்து 4 பேர் உயிரிழப்பு: விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை
சென்னை: சென்னை ஆவடி அருகே வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடி வெடித்து 4 பேர் உயிரிழந்துள்ளார். நாட்டு வெடி வெடித்ததில் படுகாயம் அடைந்த சுனில் பிரகாஷ், யாசின் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். நாட்டு வெடி வெடித்ததில் வீடு முழுவதும் சேதமடைந்த நிலையில் சம்பவ இடத்தில் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நிகழ்விடத்தில் ஆவடி தீயணைப்பு, மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் வீட்டில் பற்றிய தீயை அணைத்து உயிரிழந்த 4 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் தீபாவளியை முன்னிட்டு வீட்டிலேயே பட்டாசுகளை சேமித்து வைத்து விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.
மேலும், இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களில் யாசின், சுனில் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எஞ்சிய இருவர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் ஆவடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டு வெடி வெடித்து வீடு முழுவதும் சேதமடைந்த நிலையில் சம்பவ இடத்தில் ஆவடி காவல் ஆணையர் ஆய்வு நடத்தினர்.
சென்னை ஆவடி அருகே வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடிகள் வெடித்த காட்சி வெளியானது. தீபாவளிக்காக யாசின் என்பவர் தனது வீட்டில் நாட்டு வெடிகளை வாங்கி வைத்துள்ளார். நாட்டு வெடி வாங்கி வைத்திருந்த நண்பர்கள் 4 பேரும் இருந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது.