தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை ஆவடி அருகே வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடி வெடித்து 4 பேர் உயிரிழப்பு: விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை

 

Advertisement

சென்னை: சென்னை ஆவடி அருகே வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடி வெடித்து 4 பேர் உயிரிழந்துள்ளார். நாட்டு வெடி வெடித்ததில் படுகாயம் அடைந்த சுனில் பிரகாஷ், யாசின் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். நாட்டு வெடி வெடித்ததில் வீடு முழுவதும் சேதமடைந்த நிலையில் சம்பவ இடத்தில் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நிகழ்விடத்தில் ஆவடி தீயணைப்பு, மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் வீட்டில் பற்றிய தீயை அணைத்து உயிரிழந்த 4 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் தீபாவளியை முன்னிட்டு வீட்டிலேயே பட்டாசுகளை சேமித்து வைத்து விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.

மேலும், இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களில் யாசின், சுனில் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எஞ்சிய இருவர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் ஆவடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டு வெடி வெடித்து வீடு முழுவதும் சேதமடைந்த நிலையில் சம்பவ இடத்தில் ஆவடி காவல் ஆணையர் ஆய்வு நடத்தினர்.

சென்னை ஆவடி அருகே வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடிகள் வெடித்த காட்சி வெளியானது. தீபாவளிக்காக யாசின் என்பவர் தனது வீட்டில் நாட்டு வெடிகளை வாங்கி வைத்துள்ளார். நாட்டு வெடி வாங்கி வைத்திருந்த நண்பர்கள் 4 பேரும் இருந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது.

Advertisement

Related News