தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த சினேகா மோகன்தாஸ் மீது நடவடிக்கை: வீரலட்சுமி புகார்

Advertisement

சென்னை: பொது இடத்தில் ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த சினேகா மோகன்தாஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழர் முன்ேனற்றப்படை தலைவர் வீரலட்சுமி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: நான் அமைப்புச்சாரா மற்றும் கட்டுமான பொழிலாளர் சங்கத்திற்கு 6 ஆண்டுகளாக தலைவராக இருந்தேன்.

ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காக 10 ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறேன். தமிழகத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்கின்றனர். ஒரு ஆட்டோ ஓட்டும் தொழிலாளியை இப்படி பொது வெளியில் செருப்பால் அடிப்பது அந்த ஆட்டோ ஓட்டுநர்களை இழிவு செய்வது போல் உள்ளது. பொதுவாக ஆட்டோ தொழிலாளர்கள் சமூக அக்கறை உள்ளவர்கள், இந்த சம்பவத்தால் பொது மக்களுக்கும் அவர்கள் மீது அவநம்பிக்கை ஏற்படும்.

வெறும் விளம்பரத்திற்காக மட்டுமே மக்கள் நீதி மய்ய மகளிர் அணி பொருளாளர் சினேகா மோகன்தாஸ் மற்றும் அவருடன் வந்தவர்கள், அந்த அப்பாவி ஆட்டோ ஓட்டுநர் பிரசாத் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் எங்களை போன்றவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.

எனவே ஆட்டோ ஓட்டுநர் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும். ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய 3 பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். இதற்கிடையே ஆட்டோ டிரைவர் பிரசாத் அளித்த புகாரின்படி, செருப்பால் தாக்கிய சினேகா மோகன்தாஸ் மீது மயிலாப்பூர் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement