தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மான் குறுக்கே பாய்ந்ததால் ஆட்டோ கவிழ்ந்து பயணி பலி

*புளியங்குடி அருகே பரிதாபம்

Advertisement

புளியங்குடி : புளியங்குடி அருகே மான் குறுக்கே பாய்ந்ததால் ஆட்டோ கவிழ்ந்து பயணி பலியானார். படுகாயமடைந்த டிரைவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புளியங்குடி அருகேயுள்ள பட்டக்குறிச்சிகிராமம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சாத்தன் (55). இவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளதால் புளியங்குடி அருகேயுள்ள தலைவன்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ சிகிச்சைக்காக நேற்று காலை ஆட்டோவில் சென்றார்.

தலைவன்கோட்டை சிஎம்எஸ்கோயில் தெருவை சேர்ந்த திருவாய்மொழி (65) என்பவர் ஆட்டோவை ஓட்டி வந்தார். பட்டகுறிச்சி அருகே மலை சூழ்ந்த பரம்பு பகுதியில் ஆட்டோ சென்று கொண்டிருந்த போது திடீரென மான் ஒன்று சாலையை கடக்க முயன்றது. இதனால் மான் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பிரேக் போட்டுள்ளார். இதில் கட்டுபாட்டை இழந்த ஆட்டோ சாலையில் தலைகீழாக கவிழந்தது.

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த சாத்தன் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்தில் பலியானார். டிரைவர் திருவாய்மொழி படுகாயமடைந்தார். தகவலின் பேரில் புளியங்குடி இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாத்தன் உடலை கைப்பற்றி பிரேத பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயமடைந்த டிரைவர் திருவாய்மொழி, புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து புளியங்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News