தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆஸியுடன் இன்று 2வது டெஸ்ட்: இந்தியா ஏ அணிக்கு துருவ் ஜுரெல் கேப்டன்

லக்னோ: ஆஸ்திரேலியா ஏ அணியுடனான 2வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இன்று மோதும் இந்திய அணி கேப்டனாக, ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக, துருவ் ஜுரெல் செயல்பட உள்ளார். ஆஸ்திரேலியா ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறது. ஏற்கனவே முடிந்த முதல் போட்டி டிரா ஆனது. இந்நிலையில், 2வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி லக்னோவில் இன்று துவங்குகிறது. இந்நிலையில், முதல் போட்டியின்போது இந்தியா ஏ அணிக்கு தலைமை தாங்கிய ஷ்ரேயாஸ் ஐயர், சொந்த வேலை காரணமாக மும்பை புறப்பட்டு சென்றார்.

Advertisement

அதனால், முதல் போட்டிக்கு துணை கேப்டனாக இருந்தவரும், விக்கெட் கீப்பருமான துருவ் ஜுரெல், 2வது போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் துருவ் ஜுரெல் அபாரமாக ஆடி, 140 ரன்கள் குவித்தார். அதே சமயம், ஷ்ரேயாஸ் ஐயர், 13 பந்துகளை எதிர்கொண்டு 8 ரன்கள் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியில் ஆஸி ஏ அணி 532 ரன் குவிக்க, அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்தியா ஏ அணி 531 ரன் எடுப்பதற்கு, துருவ் ஜுரெலின் 140 ரன் முக்கிய காரணமாக அமைந்தது. 2வது டெஸ்டுக்கு பின்னர், வரும் 30ம் தேதி முதல் இந்த இரு அணிகள் இடையே 3 ஒரு நாள் போட்டிகள் நடைபெற உள்ளன.

Advertisement