தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆக.17ம்தேதி பட்டானூரில் பாமக பொதுக்குழு நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு ராமதாஸ் கையெழுத்திட்டு கடிதம்

 

திண்டிவனம்: புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான பட்டானூரில் ஆக.17ம்தேதி நடைபெறும் பாமக பொதுக்குழுவில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு, ராமதாஸ் கையெழுத்திட்ட கடிதம் அனுப்பும் பணி தைலாபுரத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையே கட்சி அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக ஏற்பட்ட உரசல் உச்சகட்டத்தில் உள்ளது. இதற்கு ஒரே தீர்வு செயல் தலைவராக அன்புமணி பணியாற்ற வேண்டுமென ராமதாஸ் கூறியும் அதை ஏற்காமல் தலைவராகவே தனது பணியை மேற்கொண்டு வருகிறார். அவர் உரிமை மீட்பு நடைபயணத்தை ஜூலை 25 முதல் மேற்கொண்டுள்ள நிலையில் இதற்கு தடை போட, ராமதாஸ் சார்பில் தமிழக டிஜிபி, உள்துறை செயலாளரிடம் கடிதம் தரப்பட்டது. எனினும் அன்புமணி நடை பயணத்தை தற்போது வரை தொடர்ந்து வருகிறார்.

இதனிடையே ஆக.17ம்தேதி பட்டானூரில் பாமக பொதுக்குழு கூட்டத்துக்கு ராமதாஸ் அழைப்பு விடுத்த நிலையில், அன்புமணி தரப்பில் மாமல்லபுரத்தில் ஆக.9ம்தேதி பொதுக்குழு கூடுவதாக அடுத்த சில மணிநேரத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் அன்புமணி மீது கடும் அதிருப்திக்குள்ளான ராமதாஸ், மகனை கட்சியிலிருந்து நீக்கிவிட்டு, மூத்தமகள் ஸ்ரீகாந்திமதிக்கு முக்கியத்துவம் அளிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகின. இந்த நிலையில் வருகிற 17ஆம்தேதி பட்டானூரில் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு தற்போதைய மாநில நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களுக்கு ராமதாஸ் கையெழுத்துடன், கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் முரளிசங்கர் ஆகியோரின் பெயரில் அழைப்பிதழ் கடிதம் அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.