தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆகஸ்ட் 17ல் ராமதாஸ் நடத்தும் பொதுக்குழுவுக்கு அங்கீகாரம் கிடையாது: பாமக வழக்கறிஞர் கே.பாலு பேட்டி

சென்னை: ஆகஸ்ட் 17ல் ராமதாஸ் நடத்தும் பொதுக்குழுவுக்கு அங்கீகாரம் கிடையாது என பாமக வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார். பாமகவில் தந்தை, மகன் மோதல் அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் பொதுக்குழுக் கூட்டத்தை அன்புமணி நடத்தினார். இக்கூட்டத்தில், பாமக தலைவராக அவர் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையே, அன்புமணி கூட்டிய பொதுக்குழுக் கூட்டம் சட்ட விரோதம் என்று கூறி தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் அனுப்பினார். அதில்,பாமக நிறுவனர் மற்றும் தலைவரான ராமதாஸின் அனுமதி இல்லாமல் எந்தவொரு கூட்டத்தையும் கூட்டுவதற்கு அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர், சாதாரண செயல் தலைவர்தான் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கட்சி பொதுக்குழு தன்னை தலைவராக தேர்வு செய்துள்ளதை மீண்டும் உறுதிப்படுத்த தேர்தல் ஆணையத்தை நாட அன்புமணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அன்புமணி இரண்டு நாட்களில் டெல்லி செல்ல உள்ளதாகவும், பொதுக்குழுவில் தனது பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையத்திடம் நேரடியாக வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது.

இந்த நிலையில், ஆகஸ்ட் 17ல் ராமதாஸ் நடத்தும் பொதுக்குழுவுக்கு அங்கீகாரம் கிடையாது என பாமக வழக்கறிஞர் கே.பாலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், அன்புமணி கட்டுப்பாட்டில்தான் பாமக உள்ளது. ஒட்டுமொத்த கட்சி நிர்வாகிகள் அனைவரும் அன்புமணி பக்கம்தான் உள்ளோம். மருத்துவர் ராமதாஸ் தன்னை பா.ம.க. தலைவர் என்று அறிவித்துக் கொள்வதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் முரண்பட்ட தகவல் தெரிவிக்கப்பட உள்ளது. பாமகவின் நற்பெயருக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்போம். கட்சி நிறுவனராக மருத்துவர் ராமதாஸ் கூட்டம் நடத்தலாம், ஆனால் பொதுக்குழுவை கூட்ட முடியாது என தெரிவித்தார்.

 

Related News