ஆக. 22ல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்: சித்தராமையா வழக்கை எதிர்கொள்ள ஆலோசனை
Advertisement
முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மூடா விவகாரம் குறித்து ஆலோசிக்க ஆகஸ்ட் 22ம் தேதி காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சிக் கூட்டம் நடத்தப்படுகிறது. விதான சவுதாவில் இக்கூட்டம் நடக்கிறது. மூடா வழக்கை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்த்து போராடுவதற்கான வியூகம் அந்த கூட்டத்தில் வகுக்கப்படும்.இந்நிலையில் வழக்கு தொடர்பாக ஆலோசனை நடத்த மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி மற்றும் கபில் சிபல் ஆகியோர் இன்று பெங்களூரு வருகின்றனர்.
Advertisement