நெமிலி அருகே நள்ளிரவு துணிகரம் டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி: போலீசாரை கண்டதும் ‘எஸ்கேப்’
Advertisement
அங்கு கடை அருகே பொருத்தப்பட்டிருந்த கேமரா வளைத்து திருப்பி வைக்கப்பட்டிருந்து. அங்கிருந்த மின்விளக்கு உடைக்கப்பட்டிருந்தது. வெளிப்புற இரும்பு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் மர்ம ஆசாமிகள் டாஸ்மாக் கடையில் திருடுவதற்காக வந்து கேமராவை திருப்பி மின்விளக்கை உடைத்து இரும்பு கேட்டின் பூட்டு உடைத்து திருட முயன்றுள்ளனர். அப்போது, போலீசார் ரோந்து வந்ததால் தப்பியோடிவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
Advertisement